சென்னை: தேசிய ஜூனியர் பாட்மின்டன் போட்டியில் தமிழக வீராங்கனை அக்ஷயா ஆறுமுகம் உள்ளிட்ட தமிழக வீரர் வீராங்கனைகள் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினர்.தேசிய அளவிலான 19வயதுக்கு உட்பட்டவர்களுக்கான தேசிய தரவரிசை ஜூனியர் பாட்மின்டன் போட்டி சென்னையில் நடக்கிறது. நேரு உள் விளையாட்டரங்களில் 3வது சுற்றுப் ேபாட்டிகள் நடைப்பெற்றன. பெண்கள் ஒற்றையர் பிரிவில் தமிழக வீராங்கனை அக்ஷயா ஆறுமுகம், மேற்வங்கத்தின் உத்சவா பாலித்துடன் மோதினார். அதில் 21-14. 21-16 என்ற நேர் செட்களில் வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.
தமிழகத்தின் நிவேதா 21-15, 21-19 என்ற நேர் செட்களில் டெல்லியின் அதயா பர்ஷாரை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தமிழக வீரர் சதீஷ்குமார் நேற்று நடைப்பெற்ற போட்டி ஒன்றில் உத்தரபிரதேச வீரர் சித்தார்தா மிஷ்ராவை 21-11, 21-12 என்ற நேர் செட்களில் வென்றார். மற்றொரு தமிழக வீரர் ரித்விக் சஞ்சீவி 23-21, 21-10, 24-22 என்ற செட்களில் உத்ரபிரதேசத்தின் துருவ் ராவத்தை போராடி வீழ்த்தினார்.