கார்டிப்: இலங்கைக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் தென் ஆப்ரிக்கா அணி 7 விக்கெட்கள் இழப்புக்கு 338 ரன்கள் குவித்தது.கார்டிப்பில் நேற்று நடைப்பெற்ற பயிற்சி ஆட்டத்தில் தென் ஆப்ரிக்கா - இலங்கை அணிகள் மோதின. டாஸ்வென்ற இலங்கை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. தொடக்க வீரர் அய்டென் மார்க்ரம் 21 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் ஆம்லா - டூ பிளிசிஸ் ஜோடி 2வது விக்ெகட்டுக்கு 128 ரன்கள் சேர்த்தது. அடுத்து வந்தவர்களும் நன்றாக விளையாட தென் ஆப்ரிக்கா அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்ெகட்கள் இழப்புக்கு 338 ரன்கள் குவித்தது.
அணியில் அதிகபட்சமாக டூ பிளிசிஸ் 88 ரன்களும், ஆம்லா 65 ரன்களும், டூஸ்சென் 40ரன்களும் எடுத்தனர். பிரிடோரியஸ் 25 ரன்களுடனும், மோரிஸ் 26 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இலங்கை அணி தரப்பில் லாக்மல் , பிரதீப் ஆகியோர் தலா 2 விக்கெட்களும், உடனா, மெண்டிஸ், டி சில்வா ஆகியோர் தலா ஒரு விக்ெகட்டும் வீழ்த்தினர். இலங்கை அணி 339 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாட தொடங்கியது.