சென்னை: 2019-2020ம் கல்வி ஆண்டில் தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் உள்ள இடங்கள் குறைக்கப்படவில்லை என்று தமிழக உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் மங்கத் ராம் சர்மா கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், 1.75 லட்சம் இடங்களில் சேருவதற்கு தற்போது வரை 1.20 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர் என்றும், இந்த ஆண்டில் 7 பொறியியல் கல்லூரிகள் மட்டுமே மூடப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.