மதுரை : நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் மோடி பிரதமராக வேண்டும் என அகில இந்திய அளவில் தீர்ப்பு வந்துள்ளது என்று மதுரையில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பேட்டி அளித்துள்ளார். தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சி தொடர வேண்டும் என மக்கள் தீர்ப்பு வழங்கியுள்ளனர் என்றும் துணை முதலமைச்சர் கூறினார்.