×

37 தொகுதிகளில் வெற்றி பெறச்செய்த வாக்காளர்களுக்கு நன்றி: முத்தரசன் அறிக்கை

சென்னை: நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்குப் பேராதரவு தந்து 37 தொகுதிகளில் வெற்றி பெறச் செய்த தமிழக வாக்காளர்களுக்கு இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் நன்றி தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்த வெற்றிக்காக கடும் உழைப்பைச் செலுத்திய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, திக தலைவர் கி.வீரமணி, மார்க்சிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், விசிக தலைவர் திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொய்தீன் மற்றும் இந்திய ஜனநாயக கட்சி, கொ.ம.தே.க, மனித நேய மக்கள் கட்சித் தலைவர்களுக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறோம். இவ்வாறு முத்தரசன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : voters ,Muthuraman , Muttaracan,votes, AIADMK ,candidates ,shocked
× RELATED திண்டுக்கல் மாவட்டத்தில்...