×

மக்கள் தீர்ப்புக்கு தலைவணங்குகிறோம் டிடிவி.தினகரன் டிவிட்டரில் கருத்து

சென்னை: மக்களின் தீர்ப்புக்கு தலைவணங்குவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் கூறியுள்ளார். இதுகுறித்து தனது டிவிட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல்களில் தமிழக மக்கள் அளித்த தீர்ப்புக்கு தலைவணங்குகிறோம். தேர்தல் அரசியலில் வெற்றி, தோல்வி என்பது இயல்பானது. எத்தனையோ இன்னல்களுக்கும், இடையூறுகளுக்கும் இடையே மக்கள் பணியாற்ற சுயேச்சைகளாக களமிறங்கியவர்களுக்கும் இரவு, பகல் பார்க்காமல் உழைத்தவர்களுக்கும், அமமுகவிற்கு வாக்களித்து ஆதரவளித்த நல்ல உள்ளங்களுக்கும் நன்றிகளை காணிக்கையாக்குகிறேன்.

ஜெயலலிதா கற்றுத்தந்த துணிவோடு பீனிக்ஸ் பறவையை போல மீண்டும் எழுந்து நிற்போம். தூய்மையான அன்போடு தமிழ்நாட்டு மக்களின் மனங்களை முழுமையாக வென்றெடுக்க பாடுபடுவோம். தமிழகத்தின் உரிமைகளுக்காக அமமுகவின் குரல் எப்போதும் போல ஓங்கி ஒலித்திடும்.



Tags : bow down, judgment, Comment , Twitter
× RELATED அவர் சொல்லும் எதையும் செய்யமாட்டார்....