×

நாடாளுமன்ற தேர்தலில் நகரப்பகுதிகளில் அதிக வாக்குகள் பெற்ற மநீம

சென்னை, மே 24: நாடாளுமன்ற தேர்தலில் கிராம பகுதிகளை காட்டிலும் சென்னை மற்றும் கோவை உள்ளிட்ட நகரப்பகுதிகளில் மக்கள் நீதி மய்யம் கட்சி 50 ஆயிரம் முதல் 1.45 லட்சம் வாக்குகள் பெற்று மூன்றாம் இடம் பிடித்துள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சி பல இடங்களில் டிடிவி.தினகரன் கட்சியான அம்மா மக்கள் முன்னேற்றம் கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சிகளை பின்னுக்கு தள்ளி மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.
 
குறிப்பாக கோவையில் 1,44,542 லட்சம் வாக்குகளும், தென் சென்னையில் 1.25 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகளும், வடசென்னையில் ஒரு லட்சம் வாக்குகளும், மத்திய சென்னை 92,047 வாக்குகளும் என நகர்புறப்பகுதிகளில் 90 ஆயிரத்திற்கு மேல் வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. கிராம பகுதிகளில் மக்கள் நீதி மய்யத்திற்கு கனிசமாக 10 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை வாக்குகள் கிடைத்துள்ளது. இதனால் பெரும்பாலான இடங்களில் திமுக, அதிமுக கட்சிக்கு அடுத்தப்படியாக மக்கள் நீதி மய்யம் மூன்றாவது இடத்தை தக்கவைத்துள்ளது.

Tags : election ,areas , Parliamentary elections, urban area, high votes, and parliament
× RELATED வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள...