×

மக்களவை தேர்தல்: தேமுதிக போட்டியிட்ட நான்கு தொகுதியிலும் பின்னடைவு..!

சென்னை: மக்களவை தேர்தலில் தேமுதிக போட்டியிட்ட நான்கு தொகுதியிலும் பின்னடைவை சந்தித்துள்ளது. 17வது மக்களவை தேர்தல் கடந்த மாதம் 11ம் தேதி தொடங்கி கடந்த 19ம் தேதி வரை 7 கட்டங்களாக நடத்தப்பட்டது. தமிழகத்தில் அதிமுக கூட்டணியும், திமுக கூட்டணியும் 38 மக்களவை தேர்தலில் போட்டியிட்டது. அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, தேமுதிக போன்ற பெரிய கட்சிகள் இடம் பெற்றிருந்தது. அதில் தேமுதிகவுக்கு நான்கு மக்களவை தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது வரை வெளியாகியுள்ள சுற்றின் முடிவுகளில் இந்தியா அளவில் பாஜக முன்னிலை பெற்று வருகிறது எனவும், தமிழகத்தில் திமுக முன்னிலையில் இருந்து வருகிறது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில் தேமுதிக போட்டியிட்ட நான்கு தொகுதிகளில் ஒரு தொகுதியில் கூட முன்னிலை வகிக்கவில்லை.

குறிப்பாக அக்கட்சியில் முக்கிய பொறுப்பில் இருக்கும் எல்கே சுதீஷ், தான் போட்டியிட்ட கள்ளக்குறிச்சி தொகுதியில் திமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் கௌதம் சிகாமணி பெற்ற வாக்குகளை விட மிகவும் பின்தங்கி என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Lok Sabha ,election ,constituencies ,Dumudiya , Lok Sabha election, downtime, recession
× RELATED மக்களவை தேர்தல் பரப்புரைக்காக...