டெல்லி: தலைநகர் டெல்லியில் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் நாளை நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து காவிரி மேலாண்மை கூட்டம் வருகின்ற 28ம் தேதி நடைப்பெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் காவிரி நதி நீரை, சம்பந்தப்பட்ட மாநிலங்கள் பகிர்ந்து கொள்வதற்காக காவிரி மேலாண்மை ஆணையத்தையும், ஒழுங்காற்று குழுவையும் மத்திய அரசு அமைத்தது. காவிரி மேலாண்மை வாரியம் கடைசியாக,கடந்தாண்டு டிசம்பர் மாதம் 3ம் தேதி கூடி ஆலோசனை நடத்தியது.