×

ஸ்ரீபெரும்புதூர் அருகே கெமிக்கல் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து: தீயை அணைக்கும் பணி தீவிரம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே சிப்காட் பகுதியில் இயங்கி வரும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மாம்பாக்கம் பகுதியில் இயங்கி வரும் கெமிக்கல் தயாரிப்பு தொழிற்சாலையில் இன்று காலை திடீரென தீ பற்றியது. ஸ்ரீபெரும்புதூர் காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 5 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தொழிற்சாலையில் இருந்த ரசாயன பொருட்கள் கொழுந்துவிட்டு எரிந்ததால் விண்ணை முட்டும் அளவுக்கு புகை மூட்டம் உருவானது. மாம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள சிப்காட்டில் நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. அந்த பகுதியில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளின் கழிவுகளும் அருகே உள்ள ராசாயன கிடங்கில் கொட்டி வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளன.

இந்த நிலையில் அந்த ரசாயன கழிவுகளில் இருந்து உருவான புகை பின்னர் புகை மண்டலமாக மாறியது. இதையடுத்து புகை மூட்டத்தில் உருவான தீ ரசாயன கழிவுகள் நிரப்பப்பட்ட கிடங்கு முழுவதும் பரவ தொடங்கியுள்ளது. தீ மளமளவென பரவியதால் அப்பகுதி முழுவதும் முகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. இதன் காரணமாக தொழிற்சாலை ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர். தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு துறையினர் மட்டும் அல்லாது தொழிற்சாலை ஊழியர்களும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தீ விபத்து காரணமாக யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை. தகவலறிந்து வந்த காவல்துறையினர் தீ விபத்துக்கான காரணங்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : fire ,Sriperumbudur ,Chemical Factory , Sriperumbudur, Mambakkam, factory, fire accident
× RELATED அறந்தாங்கியில் தீ தொண்டு நாள் வாரவிழா