×

புனேவில் பர்கர் சாப்பிட்டு ரத்த வாந்தி எடுத்த வாடிக்கையாளர்

புனே: மகாராஷ்டிரா மாநிலத்தில் தனியாருக்கு சொந்தமான பிரபல பர்கர் கடையின் பர்கரில் கண்ணாடி துண்டுகள் இருந்த சம்பவம் வாடிக்கையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தின் புனே பகுதியில் ஆட்டோ ஓட்டுநராக இருப்பவர் சஜீத் பதான். இவர் தந்து நண்பர்களுடன் பந்தயம் கட்டி தோற்றதால், நண்பர்களுக்கு ட்ரீட் கொடுக்க, கடந்த சனிக்கிழமை பர்கர் கடைக்கு சென்றுள்ளார். அப்போது நண்பர்களுடன் பேசிக்கொண்டே பர்கரை சஜீத் சாப்பிட்டுள்ளார். சாப்பிட்ட சில நொடிகளில் சஜித்துக்கு தொண்டையில் வலி ஏற்பட்டுள்ளது. மேலும் அவரது வாயில் இருந்து ரத்தம் வந்துள்ளது.

அருகிலிருந்த நண்பர்கள், வாடிக்கையாளர்கள் உடனடியாக சஜீத் சாப்பிட்ட பர்கரை சோதனை செய்தனர். அப்போது அதில் கண்ணாடி துண்டுகள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். கண்ணாடி துண்டுகள் சஜீத்தின் தொண்டைக்குள் சிக்கியதால்தான் அவருக்கு வலி மற்றும் ரத்தம் வந்துள்ளது என கண்டறிந்தனர். இதனையடுத்து சஜீத்தை மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர்.  அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், தற்போது சஜீத் பதான் உடல் நலம் தேறியுள்ளார்.


Tags : vampire ,Pune , burger, Pune, Burger King
× RELATED உதகை அருகே உள்ள சின்கோனா கிராம...