×

பாஜ ஆட்சி அமைப்பதை தடுக்க அகிலேஷூடன் கெஜ்ரிவால் பேச்சு

புதுடெல்லி: பாஜ ஆட்சி அமைப்பதை தடுப்பது குறித்து சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவுடன் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் பேசினார். மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. இந்த நிலையில், கடந்த 17ம் தேதி ஆந்திர முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு டெல்லி முதல்வர் ெகஜ்ரிவாலை சந்தித்து பேசினார். இதன் தொடர்ச்சியாக, உத்தர பிரதேச முன்னாள் முதல்வரும் சமாஜ்வாடி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவுடன் கெஜ்ரிவால் தொலைபேசியில்  பேசியதாக ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவர் சஞ்சய் சிங் டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறினார்.

இது பற்றி சஞ்சய் சிங் கூறுகையில், ‘‘மக்களவை தேர்தல் முடிவுகள் வியாழக்கிழமை வெளியாக உள்ள நிலையில், தேர்தலுக்கு பிந்தைய அரசியல் நிலவரம் குறித்து கெஜ்ரிவாலும், அகிலேஷ் யாதவும் பேச்சுவார்த்தை நடத்தினர். குறிப்பாக, மத்தியில் பாஜ மீண்டும் ஆட்சி அமைப்பதை தடுப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இது தொடர்பாக நானும் சமாஜ்வாடி தலைவர் அகிலேசை லக்னோவில் சந்தித்து பேசியுள்ளேன்,’’ என்றார்.

Tags : Akhilesh Khadriwal ,formation ,BJP , Bhajan rule, Akhilesh, Kejriwal, talk
× RELATED பாஜக அரசின் கையாலாகாத தன்மை : ப.சிதம்பரம் தாக்கு