×

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நினைவு தினம் : பாதுகாப்பு பணியில் 3000 போலீசார்

தூத்துக்குடி : தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நினைவு தினத்தையொட்டி மாவட்டம் முழுவதும் 3000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த ஆண்டு மே 22ம் தேதி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியாகினர். இதுதொடர்பான வழக்கை சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு நினைவு அஞ்சலி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. நாளை தூத்துக்குடி பெல் ஓட்டலில் ஒரு தரப்பினர் நினைவஞ்சலி கூட்டம் நடத்துகின்றனர். இதன் காரணமாக அங்கு 3000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

Tags : Thoothukudi ,police personnel , Thoothukudi gunfire ,memorial day, 3000 police personnel in defense
× RELATED தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று...