×

தேனி விடுதி உரிமையாளர்களுக்கு எஸ்.பி. எச்சரிக்கை

தேனி:  தேனி மாவட்ட எஸ்பி பாஸ்கரன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தேனி மக்களவை தொகுதி ஓட்டு எண்ணிக்கையின்போது கட்சி ரீதியாகவும், ஜாதி ரீதியாகவும் வெளியூர் நபர்களால் பிரச்னை ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.  அவர்கள் விடுதிகள், திருமண மண்டபங்களில் தங்கலாம். எனவே தங்கும் விடுதி உரிமையாளர்கள், திருமண மண்டப உரிமையாளர்கள் வாக்கு எண்ணிக்கை முடியும் வரை வெளியூர் நபர்களை தங்க வைக்க வேண்டாம். சந்தேகப்படும் வகையில் யாராவது தங்கியிருந்தால் போலீஸ் கட்டுப்பாட்டு அறை நம்பர் 100 மற்றும் எஸ்.பி தனிப்பிரிவு 04546-253101 என்ற எண்ணில் தகவல் கொடுக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.


Tags : SB , Theni, hostel, owner, SB Warning
× RELATED வெறும் 3% ஓட்டுதான்பாஜ பத்தி பேசி...