×

தமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியீடு

சென்னை: தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையில், முழு நேரமாக பணிபுரிந்து அகவிலைப்படியை பெற்று வரும் தமிழக அரசு ஊழியர்களுக்கு, அகவிலைப்படி 9 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள், உள்ளாட்சி அமைப்பில் பணிபுரியும் ஊழியர்கள் உள்ளிட்டோருக்கும் இது பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் 1ஆம் தேதி முதல் முன்தேதியிட்டு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Government Officers ,Government Employees , Income, hike, Tamilnadu government, employee
× RELATED ஓய்வு அரசு ஊழியர் சங்க கூட்டம்