×

கடல் நீர் மட்டம் குறைவு எதிரொலி... கன்னியாகுமரியில் படகு சேவை ரத்து

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் கடல் நீர் மட்டம் குறைவு காரணமாக இன்ற காலை படகுசேவை ரத்து செய்யப்பட்டது. இதனால் நீண்ட நேரம் காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றமுடன் திரும்பி சென்றனர். சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் தற்போது கோடை சீசன் களை கட்டியுள்ளது. ஆகவே விடுமுறையை கொண்டாட பல்வேறு இடங்களில் இருந்தும் ஏராளமானோர் குடும்பமாக வந்து செல்கின்றனர். சூரிய உதயம், மறைவு, திரிவேணி சங்கமத்தில் நீராடுதல், கடல் அலையை ரசித்தல் என்று காலை தொடங்கி மாலைவரை பொழுதை போக்கி வருகின்றனர் சுற்றுலா பயணிகள்.

இதே போல் கடல் நடுவே உள்ள விவேகானந்தர் பாறை, 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்து வருகின்றனர். இதற்காக பூம்புகார் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழகம் சார்பில் படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. தினசரி அதிகாலையிலேயே சுற்றுலா பயணிகள் படகு சவாரிக்காக நீண்ட கியூ வரிைசயில் நிற்பது வழக்கம். இதே போல் இன்று காலையும் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் முன்பு ஏராளமான சுற்றுலா பயணிகள் நீண்ட நரேம் காத்து இருந்தனர். இந்த நிலையில் இன்று காலை கடல் நீர்மட்டம் குறைந்து காணப்பட்டது. இதனால் படகுகள் தரை தட்டி நின்றன. இதையடுத்து படகு சேவை திடீரென ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் அதிகாலை முதலே காத்து இருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Tags : Kanyakumari , Kanyakumari, boat
× RELATED கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா ரோடு ஷோ..!!