சென்னை: சென்னை தலைமை செயலகத்துக்கு மர்ம நபர்கள் திடீர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. தேர்தல் அதிகாரிகள் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் வந்த கடிதத்தால் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் தலைமை செயலகத்தை சுற்றிலும் போலீஸ் குவிக்கப்பட்டு மோப்ப நாய்கள் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.