×

சாலை விரிவாக்கம் செய்ய கோரிக்கை

பந்தலூர் : பந்தலூர் அருகே தேவாலாவிலிருந்து அத்திகுன்னா, உப்பட்டி செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் கூடலூரிலிருந்து அரசு பஸ்களும் தனியார் வாகனங்களும் பள்ளி வாகனங்களும் அதிகளவில் வந்து செல்கின்றன. கூடலூரிலிருந்து  தேவாலா வழியாக அத்திக்குன்னு  உப்பட்டி, மற்றும் கேரளா மாநிலம் சுல்தான் பத்தேரி போன்ற பகுதிகளுக்குச் செல்லும்  இணைப்பு சாலை என்பதால் அவசர தேவைகளுக்கு ஆம்புலன்ஸ் வாகனங்கள்  வந்து செல்கிறது.

 இச்சாலையில் அத்திமாநகர் என்ற இடத்தில் மிகவும் வளைவான பகுதியில் நேற்று முன் தினம் ராமேஸ்வரத்திலிருந்து தேயிலை தொழிற்சாலைக்கு விறகு ஏற்றி வந்த லாரி ஒன்று பழுதடைந்து நின்றது. இதனால்  இந்த சாலையில் பல மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் அடிக்கடி இச்சாலையில் இதுபோன்ற நிலை நீடிப்பதால்  இதனை முறைப்படுத்த போக்குவரத்து காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பதோடு சாலையை விரிவுப்படுத்தி போக்குவரத்து பிரச்சனைக்கு உரிய தீர்வு ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.


Tags : road , Devalla, panthalur, road extension,gudalore,
× RELATED காஞ்சிபுரம் – வாலாஜாபாத் சாலையில்...