×

திருச்சியிலிருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்ட விமானம் அவசரமாக சென்னையில் தரையிறக்கம்: விமானியின் சாதுர்யத்தால் 161 பயணிகள் உயிர் தப்பினர்

சென்னை: திருச்சி விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்ட விமானம் அவசரமாக சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு இன்று காலை தனியார் விமானம் புறப்பட்டுச் சென்றது.  அதில் 161 பயணிகள் பயணித்தனர். விமானம் சென்னையை நெருங்கியபோது விமானத்தில் சரக்குகள் வைக்கும் அறையில் இருந்து புகை வெளியானதை நடுவானில் கண்ட விமானி, சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்க  அனுமதி கோரப்பட்டது.

விமானத்தை தரையிறக்க சென்னை விமான நிலையம் அனுமதி அளித்தது. அத்துடன் தீயணைப்பு வீரர்களும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டனர். இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.  விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். பின்னர் அவர்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. விமானத்தில் ஏற்பட்ட கோளாறு உரிய நேரத்தில் கண்டறியப்பட்டு தரையிறக்கப்பட்டதால் மிகப்பெரிய  விபத்து தவிர்க்கப்பட்டது. தொழில்நுட்ப வல்லுநர்கள் வரவழைக்கப்பட்டு விமானத்தில் ஏற்பட்ட கோளாறை சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. சென்னையில் தரையிறங்கிய விமானம் இன்று மாலை மீண்டும் சிங்கப்பூருக்கு புறப்படும்  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : passengers ,flight , Trichy, Singapore, flight, Chennai, landing, pilot, passenger
× RELATED செங்கல்பட்டு புறவழிச்சாலையில் லாரி...