×

சங்கராபுரம் அருகே துப்பாக்கி குண்டு பாய்ந்து பெண் படுகாயம்

சங்கராபுரம்: விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அடுத்த ஈருடையாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் தனிஸ்லாஸ்(60). இவரது மனைவி சந்தோஷமேரி(55). இவர் கடந்த மாதம்  உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார். இவருக்கு கல்லறையில் பெயர் பலகை வைப்பதில் தனிஸ்லாஸ்க்கும் அவரது தம்பி சூசைக்கண் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது தனிஸ்லாசின் இளைய மகன் லெனின்பாஸ்கர்(30) வீட்டில் இருந்த நாட்டுத்துப்பாக்கியை  எடுத்து சூசைக்கண்ணை துப்பாக்கியால் சுடமுயலும் போது அங்கிருந்தவர்கள் அதனை தடுத்தனர். அப்போது நாட்டுத்துப்பாக்கியின் குறிதவறி லெனின்பாஸ்கரின் அண்ணன் அந்தோனிசாமியின் மனைவி லிமா(28) காலில் குண்டு பாந்தது. இதில் பலத்த காயமடைந்த லிமாவை மீட்டு சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். லெனின்பாஸ்கரை மூங்கில்துறைப்பட்டு போலீசார் கைது செய்தனர்.


Tags : Sankarapuram , Shankarapuram, gun, bomber, girl, injuries
× RELATED சங்கராபுரம் ஊராட்சியில் அரசுப் பள்ளியில் ஆண்டு விழா