×

டெல்லியில் தற்கொலை செய்த மாணவன் சடலம் வேலூர் வந்தது

வேலூர்: டெல்லியில் தற்கொலை செய்து கொண்ட மாணவனின் சடலம் நேற்று அதிகாலை வேலூர் வந்தது. கேரள மாநிலத்தை சேர்ந்தவர் நிக்கல்தாமஸ், இவரது மனைவி மாயாமேரி. வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் டாக்டர்களாக பணியாற்றும் இவர்கள், பாகாயத்தில் வசித்து வருகின்றனர். தம்பதியரின் மகன் ரிஷிஜோஷ்வா(23). இவர் டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் 2ம் ஆண்டு ஆங்கில பட்டப்படிப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் பல்கலைக்கழக விடுதி அறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். பல்கலைக்கழக தேர்வில் தோல்வி அடைந்ததால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்த தகவல் அறிந்த நிக்கல்தாமஸ் தம்பதியர் டெல்லிக்கு சென்றனர். அங்கிருந்து விமானம் மூலம் நேற்றிரவு மகனின் சடலத்தை சென்னைக்கு கொண்டு வந்தனர். அங்கிருந்து நேற்று அதிகாலை 3.30 மணியளவில் வேலூருக்கு சடலம் கொண்டுவரப்பட்டது. மாணவனின் சடலம் இன்று மாலை டோல்கேட்டில் உள்ள கல்லறையில் அடக்கம் செய்யப்பட உள்ளது.


Tags : student ,suicide ,Vellore ,Delhi , Delhi, suicide, corpse, vellore
× RELATED கோவை கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய...