×

அதிமுக எம்எல்ஏ குறித்து வாட்ஸ்அப்பில் வதந்தி: குடும்பத்தினர் அதிர்ச்சி

வானூர்: வானூர் தொகுதி எம்எல்ஏ குறித்து வாட்ஸ்அப்பில் வதந்தி பரவியதால் எம்எல்ஏ மற்றும் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் வானூர் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் சக்ரபாணி (66). கிளியனூர் கிராமத்தை சேர்ந்த இவர் குறித்து வாட்ஸ்அப்பில் வதந்தி பரவியது. ஆண் நபர் ஒருவர் பேசும் அந்த ஆடியோ பதிவில், சிறிது நேரத்துக்கு முன்பு மாரடைப்பு காரணமாக வானூர் எம்எல்ஏ இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. வானூர் தொகுதி முழுக்க இந்த வாட்ஸ்அப் ஆடியோ பதிவு காட்டுத்தீ போல பரவியது. இது எம்எல்ஏ குடும்பத்தினருக்கு தெரியவரவே அதிர்ச்சியடைந்தனர். எம்எல்ஏ நலமுடன் இருக்கும் நிலையில் இதுபோன்று வதந்தி பரவியதால் அவர்கள் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகினர். மேலும் பல்வேறு தரப்பினரும் அவரது குடும்பத்தினரை தொடர்பு கொண்டு துக்கம் விசாரித்ததால் விரக்தி அடைந்தனர். இதுகுறித்து எம்எல்ஏ மகன் கதிரவன் (40) கிளியனூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, வாட்ஸ்அப்பில் வதந்தி பரப்பியது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Tags : Watts ,AIADMK , AIADMK, MLA, Watts Up, Shock
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...