மேட்டூர்: கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து குறைந்து வருகிறது. எனினும் நேற்று முன்தினம் விநாடிக்கு 33 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை நிலவரப்படி வினாடிக்கு 58 கனஅடியாக சற்று அதிகரித்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக திறக்கப்படும் நீரின் அளவு நேற்று காலை விநாடிக்கு 2000 கனஅடியில் இருந்து 1000 கனஅடியாக குறைக்கப்பட்டது. நேற்று முன்தினம் 48.82 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று காலை 48.60 அடியாக சரிந்தது.