×

மகாத்மா காந்தி தீவிரவாதியா?: திருமாவளவனுக்கு தமிழிசை கண்டனம்

சென்னை: தனியார் டிவி சேனல் ஒன்றில் பேசிய திருமாவளவன், காந்தி ஒரு தீவிரவாதி தான், அவர் இந்து மதத்தில் தீவிரமாக இருந்தார். கோட்சே ஒரு பயங்கரவாதி என்று குறிப்பிட்டிருந்தார். இதுதொடர்பாக தமிழக பாஜ தலைவர் தமிழிசை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: திருமாவளவனின் சுயரூபமும், மனநிலையும் வெளிப்பட்டுவிட்டது. சனாதன தர்மம் எதிர்ப்பு என்று பிரசாரம் செய்து வருகிறார். ஆனால் தேர்தல் வந்ததும், சிதம்பரத்தில் பக்தி பரவச வேடத்தில் சிவாச்சாரியர்களிடம் மண்டியிட்டு ஆசி வாங்கினார். நடிப்பில் கமலையும் மிஞ்சிவிட்டார். தமிழர்களுக்காக ரத்தக் கண்ணீர் சிந்துவதாக கூறினார். ஆனால் தமிழர்களை கொன்று ரத்தக்கறை படிந்த ராஜபக்சேவின் கைகளினாலேயே பரிசும் வாங்கி வந்தார்.
 
இப்போது காந்திகூட அவரது கண்களுக்கு தீவிரவாதி ஆகிவிட்டார். கோட்சேவின் செயலை யாரும் நியாயப்படுத்தவில்லை. ஆனால் காந்தியை ஒரு இந்து தீவிரவாதி என்று மிகவும் மோசமாக விமர்சிக்கும் அளவுக்கு சென்று இருக்கிறார். எல்லோரும் அவரவர் மதங்களில் உண்மையாக இருங்கள் என்றுதான் காந்தி சொன்னார். அவரையும் திருமாவளவன்  தீவிரவாதி ஆக்கி இருக்கிறார். சாதியவாதிகளுக்கு அடுத்தவரை மதவாதி என்று சொல்ல என்ன அருகதை உள்ளது. மோடி எதிர்ப்பை மட்டுமே விதைத்துவரும் உங்களுக்கு தேர்தல் முடிவுகள் தக்க பாடம் கற்பிக்கும். இவ்வாறு தமிழிசை கூறியுள்ளார்.


Tags : Mahatma Gandhi ,Tamilnadu ,Thirumavalavan , Mahatma Gandhi, the terrorist, the Tamilnadu, condemned
× RELATED தமிழ்நாட்டில் நாளுக்கு நாள்...