×

தேவாலயம், 4 கடைகளை உடைத்து பணம் திருட்டு

அண்ணாநகர்: வில்லிவாக்கம் ஒத்தவாடை தெருவில் கிறித்துவ தேவாலயம் அமைந்துள்ளது. நேற்று அதிகாலை இதன் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், அங்கிருந்த 3 உண்டியல்களை உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றனர். மேலும், தேவாலயத்தின் அனைத்து கண்ணாடிகளையும் அடித்து உடைத்து விட்டு சென்றனர். இதுகுறித்து தேவாலய நிர்வாகத்தினர் அளித்த புகாரின் பேரில், வில்லிவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இதேபோல், நேற்று முன்தினம் இரவு வில்லிவாக்கத்தில் அடுத்தடுத்து 3 கடைகளின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள், துணி மற்றும் ₹50 ஆயிரத்தை கொள்ளையடித்துச் சென்றனர். அயனாவரம், பாளையம் பிள்ளை நகரை  சேர்ந்தவர் கோபி (47). இவரது மளிகைக்கடையின் பூட்டை நேற்று முன்தினம் இரவு உடைத்த மர்ம நபர்கள், கல்லாப் பெட்டியில் வைத்திருந்த ₹40 ஆயிரம் மற்றும் மளிகை  பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.தேவாலயம், 4 கடைகளை உடைத்து பணம் திருட்டு

அண்ணாநகர்: வில்லிவாக்கம் ஒத்தவாடை தெருவில் கிறித்துவ தேவாலயம் அமைந்துள்ளது. நேற்று அதிகாலை இதன் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், அங்கிருந்த 3 உண்டியல்களை உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றனர். மேலும், தேவாலயத்தின் அனைத்து கண்ணாடிகளையும் அடித்து உடைத்து விட்டு சென்றனர். இதுகுறித்து தேவாலய நிர்வாகத்தினர் அளித்த புகாரின் பேரில், வில்லிவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இதேபோல், நேற்று முன்தினம் இரவு வில்லிவாக்கத்தில் அடுத்தடுத்து 3 கடைகளின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள், துணி மற்றும் ₹50 ஆயிரத்தை கொள்ளையடித்துச் சென்றனர். அயனாவரம், பாளையம் பிள்ளை நகரை  சேர்ந்தவர் கோபி (47). இவரது மளிகைக்கடையின் பூட்டை நேற்று முன்தினம் இரவு உடைத்த மர்ம நபர்கள், கல்லாப் பெட்டியில் வைத்திருந்த ₹40 ஆயிரம் மற்றும் மளிகை  பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.

Tags : church ,shops , Church, 4 shops, breaking, money, theft
× RELATED திண்டுக்கல்லில் சிலுவை பாதை ஊர்வலம்: ஏராளமானோர் பங்கேற்பு