டெல்லி: தேர்தல் முடிவடைந்தபின் வெளியான வாக்கு கணிப்புகளில் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என தகவல் தெரிவித்துள்ளது. நாட்டின் 17-வது மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு, கடந்த ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற்றது. கடந்த 12-ம் தேதியுடன் 6 கட்டத் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், 7 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசம், பீகாரில் 8, ஜார்க்கண்டில் 3, மத்தியப் பிரதேசத்தில் 8, பஞ்சாபில் 13, சண்டீகரில் 1, உத்தரப் பிரதேசத்தில் 13, இமாசல பிரதேசத்தில் 4, மேற்கு வங்கத்தில் 9 தொகுதிகள் என மொத்தம் 59 தொகுதிகளுக்கு, 7-வது மற்றும் இறுதி கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.
தமிழகத்தில் 38 நாடாளுமன்ற தொகுதிக்கும், 18 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த மாதம் 18ம் தேதி நடைபெற்றது. வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் மட்டும் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், தமிழகத்தில் மேலும் காலியாக இருந்த சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெற்று முடிந்தது. இந்த 4 தொகுதியில் திமுக, அதிமுக, அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். சூலூர் தொகுதியில் 22 பேரும், திருப்பரங்குன்றம் தொகுதியில் 37 பேரும், ஓட்டப்பிடாரம் தொகுதியில் 15 பேரும், அரவக்குறிச்சி தொகுதியில் 63 பேர் என மொத்தம் 137 பேர் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், அடுத்து எந்த கட்சி ஆட்சியமைக்கும்? மீண்டும் யார் பிரதமராக பொறுப்பேற்பார் என பல்வேறு செய்தி நிறுவனங்கள் தங்கள் கருத்துக் கணிப்பினை வெளியிட்டு வருகின்றன.
டைம்ஸ்நவ்- வி.எம்.ஆர். செய்தி கருத்துக்கணிப்பு:
2019 நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி 306 இடங்கள் கைப்பற்ற வாய்ப்பு உள்ளதாக டைம்ஸ்நவ்- வி.எம்.ஆர். செய்தி நிறுவனம் கருத்துக் கணிப்பில் தெரிவித்துள்ளது. மேலும், தமிழகத்தில் திமுக கூட்டணி 34 மக்களவைத் தொகுதிகளை கைப்பற்றும் என்று கருத்துக்கணிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்வர்ணா செய்தி கருத்துக்கணிப்பு: