சிவகங்கை: புலியூரில் டாஸ்மாக் கடையில் மதுபானம் வாங்க குவிந்த மது பிரியர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. திருப்பரங்குன்றம் தொகுதியில் தேர்தல் நடப்பதால் சிவகங்கை மாவட்டம் புலியூரில் மதுபிரியர்கள் குவிந்தனர். கூட்டம் அதிகமாகி தள்ளுமுள்ளு ஏற்பட்டதை அடுத்து போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.