×

தமிழகத்தின் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு பெய்ய வாய்ப்பு: வானிலை மையம்

சென்னை: தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழகத்தில் தற்போது கடுமையான வெப்பநிலை நிலவி வருகிறது. இந்த நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. தமிழகத்தின் உள்மேற்கு மாவட்டங்களான நீலகிரி, கோவை, தேனி, சேலம், உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூறிய மழை பெய்யக்கூடும்.

இடியுடன் மழை பெய்யும் போது 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். தமிழகத்தில் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அனல் காற்று வீச வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் திருப்பத்தூர், ஏற்காட்டில் தலா 2 செ.மீ., கூடலூர், வால்பாறை தலா 1 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், இன்று லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Tags : places ,Tamil Nadu , Tamil Nadu, thunderstorm, weather center
× RELATED மார்ச் 20ம் தேதி முதல் 22ம் தேதி வரை...