×

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் வைகாசி விசாகத் திருவிழாவை ஒட்டி ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் வைகாசி விசாகத் திருவிழாவை ஒட்டி ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். முருகப் பெருமானின் ஜென்ம நட்சத்திரம் என்பதால் அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு தீபாராதனையும் 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. அதிகாலை முதலே பக்தர்கள் கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

இரவு முதல் பாதயாத்திரையாக குவிந்த பக்தர்கள் காவடி எடுத்தும், வேலால் அலகு குத்தியும், நேர்த்தி கடன் செலுத்தினர். வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு பல்வேறு ஊர்களிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.


Tags : pilgrims ,festival ,Visakhand ,Thiruchendur Subramanya Swamy Temple , Tiruchendur Subramaniyaswami,temple, visited,many devotees,Vishakat festival
× RELATED உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டதால்...