திருச்சி: போலி பாஸ்போர்ட் தயாரித்து மோசடி செய்த வழக்கில் மேலும் 2 பேரை கியூ பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். ஷாகுல் ஹமீது, சின்னையா ஆகியோரை கைது செய்து கியூ பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.தலைமறைவாக உள்ள மேலும் 12 பேரை கைது செய்ய உள்ளதாக கியூ பிரிவு போலீசார் தகவல் அளித்துள்ளனர்.