சென்னை: பொன்பரப்பியில் நடந்தது பற்றி மார்க்சிஸ்ட் கம்யனிஸ்ட் கட்சி அறிக்கை தயாரித்துள்ளது என மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை தியாகராய நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த கே.பாலகிருஷ்ணன், பட்டியல் இனத்தவர்களின் வாக்குரிமையை பறிக்க திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் என்றும் கூறினார்.