×

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதி ஒருவன் சுட்டுக்கொலை : புல்வாமாவில் 3 நாட்களில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

புல்வாமா: ஜம்மு காஷ்மீர் மாநிலம் அவந்திபுராவில் பாதுகாப்பு படை வீரர்கள் நடத்திய தேடுதல் வேட்டையில் தீவிரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான். ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து பாதுகாப்பு படை வீரர்கள் அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு படை வீரர்கள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். பாதுகாப்பு படை வீரர்கள் கொடுத்த பதிலடியில் தீவிரவாதி ஒருவன் சுட்டு வீழ்த்தப்பட்டான்.

மேலும் அங்கு 2 தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் கடந்த 3 நாட்களில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். முன்னதாக காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர், அவந்திபுராவில் மிகப்பெரிய தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. காஷ்மீர் முழுவதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் சென்ற வாகனம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இதன் அதிர்ச்சி ஓய்வதற்குள் அங்கு மீண்டும் தாக்குதலுக்கு தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனை உறுதிபடுத்தும் வகையில் ஸ்ரீநகர், அவந்திபுராவில் தீவிரவாதிகள் மிகப்பெரிய தாக்குதலுக்கு தயாராகி வருவதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதனால், விமானப்படை தளத்திற்குள்ளும், அதனை சுற்றிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்துமாறு உளவுத்துறை அறிவுறுத்தி உள்ளது.


Tags : militants ,Kashmir ,Jammu ,Pulwama , Jammu and Kashmir, security personnel, militants, shotguns, pulvama
× RELATED நாட்டில் வலுவான அரசாங்கத்தை...