×

சென்னை பட்டினபாக்கத்தில் அதிகாலையில் பயங்கர தீ விபத்து.... 30-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் எரிந்து சாம்பல்

சென்னை: சென்னை பட்டினபாக்கத்தில் உள்ள டுமின் குப்பத்தில் அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் 30-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் எரிந்து சாம்பலாகியுள்ளது. சென்னை பட்டினபாக்கத்தில் கடற்கரை பகுதியை ஒட்டியுள்ளது டுமின் குப்பம். இங்கு பல்வேறு அடுக்குமாடி குடியிருப்புகளும், குடிசை பகுதிகளும் உள்ளன. இந்நிலையில் இன்று அதிகாலையில் குடிசை வீடுகள் இருக்கும் பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்து அங்கிருந்த டிரான்ஸ்பார்மரில் இருந்து வெடித்து சிதறியதால் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளனர். இந்த தீ விபத்தில் 30-க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சாம்பலாகியுள்ளன.

பொருட்கள் அதிகளவில் சேதமாகியுள்ளது. உயிர்சேதம் எதும் நடக்கவில்லை. இந்த டிரான்ஸ்பார்மர் ஏற்கனவே பிரச்சினைக்குரியதாக இருந்ததாக அப்பகுதி மக்கள் புகார் அளித்தும் அதன் மீது சரியான நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளனர். பெரும்பாலான மக்கள் தீ விபத்தின் போது வீடுகளில் இல்லை. கோடை வெப்பத்தின் காரணமாக பெரும்பாலான இப்பகுதி மக்கள் மெரினா கடற்கரையில் தான் தூங்குகின்றனர். இதனால் பெருமளவில் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இதனிடையே தீ விபத்து தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அனைத்து கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

Tags : fire ,Chennai ,cottages , Chennai, Pattanapakkam, cottage houses, fire accident
× RELATED அறந்தாங்கியில் தீ தொண்டு நாள் வாரவிழா