×

பொன்னேரியில் அடிக்கடி நிலவும் மின்வெட்டு : நள்ளிரவில் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

திருவள்ளூர்: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மின்வெட்டு ஏற்பட்டு வரும் நிலையில் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொன்னேரி பேரூராட்சிக்கு உட்பட்ட இடங்கள் மற்றும் ஏலியம்பேடு, ஆளாடு, வயிரவன் குப்பம் ஆகிய இடங்களி்ல அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் வெண்பாக்கம் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

அங்கு வந்த போலீசாருடன் அவர்கள் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். மின்மிகை மாநிலம் என்று கூறிக்கொள்வது பேச்சளவில் தான் உள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளனர். மின்வெட்டை பயன்படுத்தி திருட்டு நடப்பதாகவும் கூறியுள்ளனர். போலீசார் அளித்த வாக்குறுதியை அடுத்து முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது. போராட்டம் நடத்திய பிறகு மின்சாரம் வழங்கப்பட்டது. பின்னர் 1 மணி நேரம் கழித்து வழக்கம் போல் மின்தடை ஏற்பட்டது.

Tags : civilians ,Ponneri , Ponneri, power cut, resistor, Public, Electricity Board office
× RELATED சிறுத்தை நடமாட்டம்: மக்களுக்கு வனத்துறை கோரிக்கை