×

மாயனூர் அருகே கார் மீது மினி லாரி மோதல் 2 குழந்தைகள் உள்பட 6 பேர் பலி: குலதெய்வ கோயிலுக்கு சென்ற போது பரிதாபம்

கரூர்: கரூர் மாவட்டம் மாயனூர் அருகே கார் மீது மினி லாரி மோதியதில் 2 குழந்தைகள் உட்பட 6 பேர் பலியாயினர். கரூர் மாவட்டம் கீழ மாயனூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி(70). விவசாயி. இவரின் உறவினர்கள் கண்ணமுத்தாம்பட்டியை சேர்ந்த சிவக்குமார்(35). இவரது மனைவி அருணா(27). இவர்களின் மகன் ஜோஸ்வந்த்(1), சுஷாந்த் கிருஷ்ணா(ஒன்றரை மாதக்குழந்தை), திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறையை சேர்ந்தவர்கள் கிஷோர்(12), நவீன்(23), கீழ மாயனுரை சேர்ந்த கோமதி(24) ஆகிய 8 பேரும் திருச்சி மாவட்டம் முசிறி அருகேயுள்ள ஈச்சங்கோட்டையில் உள்ள குலதெய்வ கோயிலுக்கு சுவாமி கும்பிட காரில் புறப்பட்டனர். காரை சிவக்குமார் ஓட்டிச் சென்றார்.

நேற்று காலை 11 மணியளவில் கார், கரூர் திருச்சி பைபாஸ் சாலை பொய்கைபுதூர் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது சென்னையில் இருந்து கரூர் நோக்கி வந்த மினி லாரி கண் இமைக்கும் நேரத்தில் எதிர்பாராதவிதமாக கார் மீது நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில், கிருஷ்ணமூர்த்தி, கிஷோர் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். ஆபத்தான நிலையில், மற்ற 6 பேரும் கரூர் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி நவீன், ஜோஸ்வந்த், சுஷாந்த் கிருஷ்ணா, அருணா ஆகிய 4 பேரும்  இறந்தனர். சிவக்குமார், கோமதி ஆகிய இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து மினி லாரி டிரைவர் முருகேசன் மீது லாலாப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : children ,Minor Larry ,Meonur , Meonoor, Car, mini truck, conflict
× RELATED புது வாழ்விற்கு வழியமைத்ததிரு(புது)நாள்