×

வாரணாசியில் மிரட்டுறாங்க : மாயாவதி குற்றச்சாட்டு

உத்தர பிரதேசத்தில் உள்ள வாரணாசி மக்களவை தொகுதியில் பிரதமர் மோடி மீண்டும் போட்டியிடுகிறார். இங்கு நாளை தேர்தல் நடக்கிறது.
இந்நிலையில், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி நேற்று தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் ‘வாரணாசியில் பிரதமர் மோடி வெற்றி பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்பதற்காக அங்குள்ள வாக்காளர்களை வெளியாட்கள் மிரட்டி, அச்சுறுத்துகின்றனர். இவ்வாறு நடக்கும்போது எப்படி நேர்மையான, சுதந்திரமான தேர்தல் நடைபெறும்? மேற்கு வங்கத்தில் கண்காணிப்பது போல், வாரணாசி தொகுதியை  தேர்தல் ஆணையம் கண்காணிக்காதது ஏன்?’ என்று கூறியுள்ளார்.

Tags : Varanasi ,Mayawati , Violence in Varanasi, Mayawati's allegation
× RELATED காசி விஸ்வநாதர் கோயிலில் போலீசுக்கு காக்கிக்கு பதில் காவி உடை