காத்மாண்டு: எவரெஸ்ட் சிகரத்தில் ஏற்கனவே 2 இந்திய மலையேற்ற வீரர்கள் பலியான நிலையில், நேற்றும் மேலும் 2 வீரர்கள் பலியாகினர்.மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த 2 மலையேற்ற வீரர்கள் பிப்லாப் பாய்டா (48), குன்டல் கரார் (46) ஆகியோர் கடந்த புதன்கிழமை எவரெஸ்ட்டில் உள்ள கஞ்சன்ஜங்கா சிகரத்தை தொட்டு விட்டு திரும்பும் வழியில் உடல்ந லக்குறைவால் உயிரிழந்தனர். இந்த நிலையில், மேலும், 2 இந்திய மலையேற்ற வீரர்கள் நேற்று உயிரிழந்து உள்ளனர். இவர்களில் ஒருவர் ரவி தாகூர் (28) என்பதும், இவர் இந்திய ராணுவ வீரர் என்பதும் தெரிய வந்துள்ளது. எவரெஸட் சிகரத்தில் இருந்து தரையிறங்கியபோது முகாம் 4ல் தங்கியிருந்த அவர் நேற்று அதிகாலை பிணமாக கிடந்தார். முன்னதாக கடந்த வியாழக் கிழமை இதே முகாமில் தங்கியிருந்த நாராயண் சிங் இறந்து கிடந்தார். இந்நிலையில், தீபங்கர் கோஷ் என்பவரையும் காணவில்லை.