×

கோவை நடைப்பாதையில் கதறி அழுத பச்சிளம் குழந்தை மீட்பு: பெற்றோர் குறித்து போலீசார் விசாரணை

கோவை: கோவையில் நடைபாதையில் கட்டைப்பை ஒன்றில் கதறி அழுது கொண்டிருந்த பிறந்து 7 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை மீட்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி சாலையின் நடைப்பதையில், கட்டைப்பையில் வைக்கப்பட்டிருந்த குழந்தை ஒன்று அழுது கொண்டிருந்தது. அந்த வழியாக சென்ற கல்லூரி மாணவர்கள் குழந்தையை மீட்டு ஆம்புலன்ஸ் வரவைத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. தொட்டில் குழந்தை திட்டம் முடங்கி போனதே, இதுபோன்று பிறந்து சில நாட்களே ஆன குழந்தைகள் நடைப்பதையில் விட்டு செல்லும் அவலத்திற்கு, காரணம் என சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் குழந்தையின் தாய் யார் என தேடி வருகின்றனர். குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் மருத்துவமனைகளில் குழந்தை பிறப்பு பதிவேடுகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.



Tags : parents ,KOCHI , Coimbatore, child's recovery, police investigate
× RELATED நீதிமன்றத்தில் கூட பாதுகாப்பில்லை...