டெல்லி : மதுரை மக்களவைத் தேர்தலை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்துள்ளது.தேர்தல் நடந்து முடிந்து விட்டதால் இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிட அதிகாரம் இல்லை என்று கூறிய நீதிபதிகள், வேண்டுமெனில் கீழமை நீதிமன்றத்தில் தேர்தல் வழக்காக தாக்கல் செய்ய மனுதாரருக்கு அறிவுரை வழங்கியுள்ளது.