டெல்லி: காந்தியை கொன்ற கோட்சே தேச பக்தர் என்று பேசிய போபால் பாஜக வேட்பாளர் சாத்வி ப்ரக்யாவுக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்தார். காந்தியை அவமதிக்கும் வகையில் பேசிய சாத்வியை மணிக்க முடியாது என பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார். மத்திய பிரதேச மாநிலம் போபால் மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுபவர் சாத்வி பிரக்யா சிங்.