×

63 வேட்பாளர்கள் உள்ளதால் அரவக்குறிச்சி தொகுதியில் 4 வாக்குப்பதிவு இயந்திரங்கள் : தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ

சென்னை ; 4 தொகுதி இடைத்தேர்தல், மறுவாக்குப்பதிவு ஆகிய தேர்தல் பணிகளில் 5,508 ஊழியர்கள் ஈடுபட உள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.  பாதுகாப்பு பணியில் 1300 சிஆர்பிஎப் வீரர்கள் மற்றும் 15,939 காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என்றும் சத்யபிரதா சாஹூ கூறினார். 63 வேட்பாளர்கள் உள்ளதால் அரவக்குறிச்சி தொகுதியில் 4 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன என்றும் அவர் கூறினார்.


Tags : Satyabrata Sahoo ,constituency ,Aravakurichi , By-election, re-recording, Satyabrata Sahu, election officer, Aravakurichi
× RELATED உளுந்தூர்பேட்டை தொகுதி வாக்குப்பதிவு...