×

ரயில் பயணிகள் தங்களது பொருட்களை கவனமாக பாதுகாத்து கொள்ள வேண்டும் : ரயில்வே டிஐஜி

சென்னை : ரயில் பயணிகளிடம் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த கேரள மாநிலம் திரிச்சூரை சேர்ந்த சாகுல்ஹமீது கைது செய்யப்பட்டு அவரிடம் இருந்து 110 சவரன் நகைகள் பறிமுதல்செய்ததாக ரயில்வே டிஐஜி பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் ரயில்களில் 4 ஆண்டுகளாக திருடிய சாகுல்ஹமீது, அந்த பணத்தை கொண்டு மலேசியாவில் ஓட்டல் ஒன்றும் வாங்கியுள்ளார் என்று கூறிய அவர் பாலகிருஷ்ணன், ரயில் பயணிகள் தங்கள் எடுத்துச்செல்லும் பொருட்களை கவனமாக பாதுகாத்து கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். 


Tags : Train passengers , Train passengers must carefully protect their products: Railway DIG...
× RELATED வெள்ளத்தால் ஸ்ரீவைகுண்டத்தில்...