×

இங்கிலாந்தில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் 30-ம் தேதி தொடக்கம்: தமிழக வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா?

மும்மை: உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ள தமிழக வீரர்கள் தினேஷ்கார்த்திக், விஜய்சங்கர் ஆகியோருக்கு ஆடும் லெவன் அணியில் இடம் கிடைக்குமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர் நோக்கியுள்ள உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் வரும் 30-ஆம் தேதி தொடங்க உள்ளது. விராட்கோலி தலைமையில் களம்மிறங்கும் இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கபட்டுவிட்டது. அணியில் தமிழக வீரர்கள் தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர் ஆகியோருக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் ஆடும் லெவன் அணியில் விளையாட இருவருக்கும் வாய்ப்பு கிடைக்குமா என்பது கேள்வி குறியாக மாறியிருக்கிறது. முன்னாள் கேப்டன் தோனி அணியில் விக்கெட் கீப்பங் பணியை மேற்கொள்வர். இதனால் தோனிக்கு காயம் ஏற்பட்டால் மட்டுமே, தினேஷ் கார்த்திக்கு வாய்ப்பு கிடைக்கும். இதே போல் ஆல் ரவுண்டராக உள்ள மற்றோரு தமிழக வீரருக்கும் இதே நிலைதான். இ.பி.எல் தொடரில் அதிரடி ஆல் ரவுண்டராக ஜொலித்த ஹர்டிக் பாண்டியாவுக்கு ஆடும் லெவன்  அணியில் இடம்பெற வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர் இருவருக்கும் உலக கோப்பையில் விளையாடுவது கடினம் என்பது கிரிக்கெட் நிபுணர்களின் கணிப்பு ஆகும்.




Tags : Cricket World Cup ,England , Cricket,World Cup,England,Tamilnaadu players
× RELATED சில்லிபாயின்ட்…