×

108 ஆம்புலன்ஸில் குழந்தை பிறந்தது

மதுரை : பிரசவத்திற்கு 108 ஆம்புலன்ஸில் மருத்துவமனை சென்ற பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. மதுரை வெள்ளரிப்பட்டி அருகே உள்ள பெருமாள்பட்டியை சேர்ந்தவர் பிரியா. இவருக்கு நேற்று மதியம் பிரசவ வலி ஏற்பட்டதால் 108 ஆம்புலன்ஸ் அழைக்கப்பட்டது. ஊருக்கு வந்த 108 ஆம்புலன்ஸ் பிரியாவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது. மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே 108 ஆம்புலன்சில் சுகப்பிரசவத்தில் பிரியாவிற்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

ஆம்புலன்ஸ் வாகனத்தில் இருந்த அவசர மருத்துவ உதவியாளர் தேவிகா, ஆம்புலன்ஸ் ஓட்டுனர் கண்ணதாசன் உள்ளிட்ட இருவரும் பிரசவம் பார்த்தனர்.  சுகப்பிரசவம் ஆன தாய் பிரியா மற்றும் பிறந்த குழந்தை நலமாக உள்ளனர். இருவரும் மேலூர் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.

Tags : baby , 108 ambulance. madurai,child,preganant lady
× RELATED பலூன் விளையாட்டும்… குழந்தை செல்லூர் ராஜூம்…