×

வரும் 23ம் ேததி மோடிக்கு ‘பை பை’:பீகாரில் ராகுல் உற்சாகம்

‘‘வரும் 23ம் தேதி பிரதமர் மோடிக்கு, நாம் பை-பை சொல்லலாம்’’ என பீகார் தேர்தல் பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உற்சாகமாக பேசினார். பீகார் மாநிலம் பாடலிபுத்ரா மக்களவை தொகுதியில், லாலுவின் மகள் மிசா பாரதி போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக விக்ரம் என்ற இடத்தில் நேற்று நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில், ராகுல் பேசியதாவது: ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவோம், 2 கோடி வேலை வாய்ப்பு உருவாக்குவோம் என பிரதமர் மோடி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு உறுதி அளித்தார். ஆனால் அவற்றை நிறைவேற்ற மோடி தவறிவிட்டார். தற்போதைய தேர்தல் முடிவுகள் வரும் 23ம் தேதி எண்ணப்படுகிறது. அன்று மக்களின் கோபத்துக்கு சரியான பதிலடி கிடைக்கும்.


ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக நாம் கேட்கும் கேள்விகளுக்கு, மோடி கட்டாயம் பதில் அளிக்க வேண்டும். இந்த ஒப்பந்தத்தை அவர் ஏன் அனில் அம்பானிக்கு கொடுத்தார்? ரபேல் போர் விமானத்துக்கு, ஏற்கனவே நிர்ணயம் செய்த விலையை விட அவர் ஏன் கூடுதலாக கொடுத்தார்? இதற்கெல்லாம் அவர் பதில் அளிக்க வேண்டும். தேர்தல் பிரசாரத்துக்கு நாடு முழுவதும் பிரதமர் மோடி பயணம் செய்தார். ஆனால் இந்த ஊழல் பற்றி பேசுவதை அவர் தவிர்த்தார். ஆனால், அவர் தப்பிச் செல்ல நாம் அனுமதிக்கவில்லை. இந்த ஊழல் தொடர்பாக வெளிப்படையான விவாதத்துக்கு அவர் முன் வர வேண்டும் என நான் சவால் விடுக்கிறேன். அவருக்கு வரும் 23ம் தேதி ‘பை-பை’ சொல்லப்படும். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ‘நியாய்’ திட்டம் அமல்படுத்தப்பட்டு, ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும். இத்திட்டம் அதிக தொழிற்சாலைகள் தொடங்கவும், உற்பத்தி அதிகரிக்கவும், வேலைவாய்ப்பு பெருகவும் வழிவகுக்கும். இத்திட்டம் நமது பொருளாதாரத்துக்கு எரிபொருளாக இருக்கும் என்றார்.


Tags : Rahul ,enthusiast ,Bihar , Modi, Rahul, enthusiasm
× RELATED சொல்லிட்டாங்க…