×

மகனை காப்பாற்ற முயன்ற தந்தைக்கு கத்திக்குத்து

தண்டையார்பேட்டை: காசிமேடு, ஜி.என்.பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (48). இவரது மகன் மதன் (24). வேன் டிரைவர். இருவரும், நேற்று முன்தினம் மாலை காசிமேடு, இந்திரா நகர் பகுதியில் நடந்து வந்தபோது எதிரே வந்த 16 வயது சிறுவன், மதனிடம் தகராறில் ஈடுபட்டான். பின்னர், திடீரென அந்த சிறுவன் மறைத்து வைத்திருந்த கத்தியால் மதனை குத்திக் கொல்ல முயன்றான். அதிர்ச்சியடைந்த ஆறுமுகம் அவனை தடுத்தபோது அவருக்கு கத்திக்குத்து விழுந்தது. படுகாயமடைந்த ஆறுமுகத்தை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

போலீசார் விசாரணையில், மதனுக்கும், அந்த சிறுவனுக்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கலில் முன்விரோதம் இருந்துள்ளது. இதனால் மதனை சிறுவன் கத்தியால் குத்தியது தெரிந்தது. இதையடுத்து, அந்த சிறுவனை போலீசார் கைது செய்து கெல்லீசில் உள்ள அரசு சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்த்தனர்.

Tags : Son, father, knife
× RELATED குண்டாஸ் முடிந்து வெளியே வந்த ஒரு...