×

காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை: ராணுவ வீரர் உட்பட 2 பேர் மரணம்

ஸ்ரீநகர்: பாதுகாப்பு படையினருக்கும்,  தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிசூட்டில் 3 தீவிரவாதிகள்  சுட்டுக்கொல்லப்பட்டனர். காஷ்மீரில் தீவிரவாதிகளின் தாக்குதல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், புல்வாமா மாவட்டத்தில் உள்ள திலிபோரா கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மறைந்திருந்த தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதற்கு இந்திய வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் தாக்குதலில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார். மேலும் ரயீஷ் தார் என்ற இளைஞரும் உயிரிழந்தார். மேலும் கொல்லப்பட்டவர்கள் யார் என அடையாளம் காணப்பட்டுள்ளது. நசீர் பண்டித் என்ற தீவிரவாதி புல்வாமா கரீமாபாத் பகுதியை சேர்ந்தவன் என தெரியவந்துள்ளது. உமர் மிர் சோபியான் மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த காலித் என்பதும் தெரியவந்துள்ளது. இவர்கள் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள். பல்வேறு குற்றவழக்குகளில் இவர்களுக்கு தொடர்புள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags : terrorists ,Kashmir , Kashmir, terrorist, shot dead
× RELATED 133 பேர் பலியான மாஸ்கோ தாக்குதல்...