உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ள வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார், ‘ ஐபிஎல் தொடரில் விளையாடியது உலக கோப்பைக்கான பயிற்சி ஆட்டமாக அமைந்தது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக பந்து வீசிய அதே விதத்தில் உலக கோப்பையிலும் வீசினால் பலன் இருக்கும். ஆடும் அணியில் யாருக்கு இடம் கிடைத்தாலும் இந்திய பந்து வீச்சாளர்கள் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். எங்கள் பந்துவீச்சை மற்ற அணிகள் கவனமாக எதிர்கொள்ளும்’ என்றார்.