மதுரை : மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் முன்ஜாமின் மனுமீது உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணை தொடங்கியது. காந்தியை கொன்ற கோட்சே இந்து தீவிரவாதி என்று அரவக்குறிச்சி தேர்தல் பிரச்சாரத்தில் கமல்ஹாசன் பேசினார். இதனால் அரவக்குறிச்சி காவல்நிலையத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.