சென்னை: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மக்கள் நீதி மைய நிர்வாகி சென்னை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் கமலின் சர்ச்சை பேச்சை அடுத்து அவரது நாக்கை துண்டிக்க வேண்டும் என பேசியதற்காக அமை்ச்சர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளார்.